Saturday, May 21, 2011

நெசவு தெரு பொதுநல அமைப்பு - யு.ஏ.இ

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும்,
                      அன்பார்ந்த நெசவு தெருவாசிகளுக்கு,நமது நெசவு தெரு பொதுநல அமைப்பு,சில காரணங்களால் சில வருடங்கள் இடைவெளி ஏற்பட்டது.அதனால் மீண்டும் நமது அமைப்பை இறைவன் உதவியால்  வெள்ளிக்கிழமை (20/05/2011) மாலை மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள ஹாரூன் ரூமில் இக்கூட்டம் நல்ல முறையில் நடைபெற்றது.கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.அப்பொழுது நமது நெசவு தெரு பொதுநல அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்..
தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகிகளின் விபரம்,

தலைவர்       :     முகைதீன் (s/o நூர் முகம்மது )

பொருளாளர்    :     முகம்மது தாஹா (s/o நெய்னா முகம்மது )

செயலாளர்கள்
1.சாகுல் ஹமீது (s/o முகம்மது அபூபக்கர் )
2.ஹாரூன் ரஷீது (s/o செய்யது இப்றாகீம் )
3.சேக் அப்துல்லா (s/o ஜபருல்லா )
4.சாகுல் ஹமீது (s/o பஷீர் அஹமது )
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
மாத சந்தாவாக திர்ஹம் 10 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
நெசவு தெரு பொதுநல அமைப்பின் நோக்கம் நமது தெருவாசிகளுக்கு
நம்மால் இயன்ற அளவு உதவிகள் செய்வது.

வருங்கால திட்டங்கள்:
1.அவசர கால மருத்துவ உதவி
2.மார்க்க கல்வி உதவி
3.ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி
4.ஏழை குழந்தைகளுக்கு கத்னா செய்ய உதவி
இவை அனைத்தும் நமது அமைப்பின் நிதி நிலைமையை பொருத்து
உதவிகள் செய்யப்படும்..
ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதற்காக அமைக்கப்பட்ட நமது நெசவு தெரு பொதுநல அமைப்புக்கு நாம் எல்லோருடைய ஆதரவும்,ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்









وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான். (அல்குர்ஆன் 63:10)

இப்படிக்கு,
நெசவு தெரு பொதுநல அமைப்பு – யு.ஏ.இ

Wednesday, May 18, 2011

முக்கிய அறிவிப்பு..


அஸ்ஸலாமு அலைக்கும்,

               அன்பார்ந்த நெசவு தெருவாசிகளுக்கு,இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக் கிழமை ( 20 -05 - 2011 ) மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள ஹாரூன் ரூமில் நமது தெரு பொதுநல அமைப்பின்  கூட்டம் நடை பெற உள்ளது. அன்று நடைபெறும் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப் பட உள்ளனர்.அது சமயம் நமது தெரு சகோதரர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்து கொண்டு உங்களது கருத்துகளையும்,ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

நெசவு தெரு பொதுநல அமைப்பு - யு.ஏ.இ

Friday, May 6, 2011

ஆலோசனை கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

                   யு.ஏ.இ வாழ் நெசவு தெருவாசிகள் இன்று (06-05-2011)  ஷார்ஜா ஹாரூன் ரூமில் ஒன்று கூடி மீண்டும் நலப்பனிகளை தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது.இதன்படி நமது தெருவாசிகள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.  நாம் அழைப்பு  கொடுத்ததில் அதிகபட்சமாக
20 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.நம் எல்லோருடைய நோக்கமும் நமது தெரு நலப்பணிக்காக இருப்பதால் தொடர்ந்து முன்பு இருந்ததை விட சிறப்பாக செய்ய முடிவு செய்யப்பட்டது.சில தவிற்க முடியாத சூழ்நிலையால் பலர் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.அதனால் இன்ஷா அல்லாஹ்  வரும் 13-5-2011  அன்று மீண்டும்  அனைவரும் ஒன்று கூடி முக்கிய முடிவுகள் எடுக்கலாம் என்று ஒருமித்த கருத்து ஏற்பட்டது.அதனால்  06-05-2011 அன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் வரும் 13-05-2011 அன்று நடைபெறும் கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்  என்று  கேட்டுக்கொள்கிறோம்.

கூட்டம் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

                                      கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
                             



இப்படிக்கு,

நெசவு தெரு பொதுநல அமைப்பு  - யு.ஏ.இ