அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பார்ந்த நெசவு தெருவாசிகளுக்கு,நமது நெசவு தெரு பொதுநல அமைப்பு,சில காரணங்களால் சில வருடங்கள் இடைவெளி ஏற்பட்டது.அதனால் மீண்டும் நமது அமைப்பை இறைவன் உதவியால் வெள்ளிக்கிழமை (20/05/2011) மாலை மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள ஹாரூன் ரூமில் இக்கூட்டம் நல்ல முறையில் நடைபெற்றது.கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.அப்பொழுது நமது நெசவு தெரு பொதுநல அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்..
தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகிகளின் விபரம்,
தலைவர் : முகைதீன் (s/o நூர் முகம்மது )
பொருளாளர் : முகம்மது தாஹா (s/o நெய்னா முகம்மது )
செயலாளர்கள்
1.சாகுல் ஹமீது (s/o முகம்மது அபூபக்கர் )
2.ஹாரூன் ரஷீது (s/o செய்யது இப்றாகீம் )
3.சேக் அப்துல்லா (s/o ஜபருல்லா )
4.சாகுல் ஹமீது (s/o பஷீர் அஹமது )
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
மாத சந்தாவாக திர்ஹம் 10 என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
நெசவு தெரு பொதுநல அமைப்பின் நோக்கம் நமது தெருவாசிகளுக்கு
நம்மால் இயன்ற அளவு உதவிகள் செய்வது.
வருங்கால திட்டங்கள்:
1.அவசர கால மருத்துவ உதவி
2.மார்க்க கல்வி உதவி
3.ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி
4.ஏழை குழந்தைகளுக்கு கத்னா செய்ய உதவி
இவை அனைத்தும் நமது அமைப்பின் நிதி நிலைமையை பொருத்து
உதவிகள் செய்யப்படும்..
ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதற்காக அமைக்கப்பட்ட நமது நெசவு தெரு பொதுநல அமைப்புக்கு நாம் எல்லோருடைய ஆதரவும்,ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான். (அல்குர்ஆன் 63:10)
இப்படிக்கு,
நெசவு தெரு பொதுநல அமைப்பு – யு.ஏ.இ