அல்லாஹ்வின்
திருப்பெயரால்...
அன்புடையீர்,
அல்லாஹ்வின்
பேரருளால் நம் தெரு மாஆதினுல் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் இன்று (21-05-2012)
நெசவுத்தெரு பொதுநல அமைப்பும்(அமீரகம்) வாஸன் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய
இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் நீரழிவு நோய் பரிசோதனையும் வெற்றிகரமாக நடந்து
முடிந்திருக்கிறது, எல்லாப்புகழும் இறைவனுக்கே..
இதனால்
நமது தெருவாசிகளும், அதிரை மக்களும் இன்னும் நம்மூரை சுற்றியுள்ள அனைத்து கிராம
மக்களும் சுமார் 350 க்கும் மேல் கலந்துக்கொண்டு பயனடைந்துள்ளார்கள் என்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
வாசன்
கண் மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், கண் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எமது
மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு, மேலும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு
அளித்த அனைத்து தெருவாசிகளுக்கும், திறம்பட சிறப்பாக நடத்திக்காட்டிய அமீரக வாழ் நெசவுத்தெரு பொது நல அமைப்பினருக்கும், இணையத்தில் விளம்பரப்படுத்திய
அனைத்து சகோதர வலைத்தளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு அல்லாஹ்
அனைவருக்கும் பரக்கத்தும் ரஹ்மத்தும் அருள்வானாகவும் (ஆமீன்)
என்றும்
நலம் விரும்பும்,
தலைவர்
மற்றும் நிர்வாகிகள்
நெசவுத்தெரு
பொதுநல அமைப்பு (அமீரகம்)
No comments:
Post a Comment